திரைப்படம் மூலமாக விமர்சித்தாலும் அது தேசத்துரோக செயலாக கருதப்படும் என சினிமா இயக் குநர்களுக்கு ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் மிரட் டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”உண்மையை உடைத்துப் பேசுகிறோம் என சமீபகாலங்களில் மதங்க ளைப் புண்படுத்துவது, தனிப் பட்ட நபரை மறைமுகமாகத் தாக்கி சினிமா காட்சிகள் வைப் பது போன்றவைத் தொடர் கதையாகி இருக்கிறது. அதே சமயம் நாட்டில் மதங்கள் பெய ரில் அப்பாவிகள் மீது நடத்தப் படும் வன்முறைகள் குறித்தும் கடவுள்கள் குறித்தும் படமெ டுக்கப்படும் போதும் கடுமை யான சர்ச்சைகளை குறிப்பிட்ட மதத்தினர் முன்னெடுப்பதைப் பார்க்க முடிகிறது.
திரைப்படம் மூலமாக இந்திய அரசமைப்புச் சட்டத் துக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் எந்தவிதமாக கருத் துகள் வந்தாலும் அது தடை செய்யப்படும். முக்கியமாக நட்பு நாடுகளுக்கு எதிராக பேசு வதும் கூட தேச துரோக செயல் தான். அதை ஒருபோதும் அனு மதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் திரைப்படங்க ளில் சட்ட விரோதக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் இயக்குநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகனின் இந்த பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.