சென்னை, ஆக. 28 -
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும்போதே உடனுக்குடன் யு-வின் செயலியில் பதிவேற்றம் செய்ய வற்புறுத்துவதை கண்டித்து திங்களன்று (ஆக. 28) சென்னையில் கிராம சுகாதார செவிலி யர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் சி.பர மேஸ்வரி கூறியதாவது:
5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு கிராம செவிலியர் தாய்- சேய் நலப் பணி செய்து வந்தனர். தற்போது 10 முதல் 15 ஆயிரம் பேருக்கு ஒரு செவிலியர் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். கடுமையான பணிச் சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும்போது உடனுக்குடன் யுவின் செயலியில் பதிவேற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். இதனால் செவிலியர்கள் சரி வர பணி செய்ய முடிய வில்லை. எனவே, அதை கைவிட வேண்டும்.
கூகுள் ஷீட் அறிக்கை, யுவின் செயலி பதிவேற்றம் போன்ற பணிகளுக்கு டேட்டா ஆப்ரேட்டரை நியமனம் செய்ய வேண்டும், நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் நகர்நல செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் மு.அன்பரசு தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.ராணி, பொருளாளர் க. ஜெயலெட்சுமி, துணைத் தலைவர் பி.பரமேஸ்வரி மற்றும் தோழமைச் சங்கத் தலைவர்கள் பேசினர்.
தமிழ்நாடு அரசு தலைமை செயலக சங்கத் தலைவர் சு.வெங்கடேசன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இந்தப் போராட்டத்தை யொட்டி சங்கத் தலைவர் களை அழைத்து தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேச்சுவார்த்தை நடத்தி னார்.