tamilnadu

img

பயணக் கட்டணத்தை திரும்பப்பெற வங்கிக்கணக்கை தெரிவிக்க வேண்டாம்... தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:
பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப்பெற பயணியர் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கவேண்டாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறபயணியரிடம் வங்கி கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் ஒரு போதும் தொலைபேசிவாயிலாக கேட்பதில்லை. மோசடி கும்பலைச்சேர்ந்த சிலர் இதுபோன்ற தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்பதாக புகார்கள்வருகின்றன. ரயில் பயணியர் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக வங்கி ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி பின் எண்கள், ஏ.டி.எம்., பாஸ்வேர்டு ஆகியவைகளை தெரிவிக்க வேண்டாம்.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழக இணையதளத்தின் மூலம் பதிவு செய்த பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தொகை பயணம் ரத்தாகும் போது பயணியரின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ரயில்வே நிலையங்களில் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுக்கான கட்டணம் உரிய காலக்கெடுவில் திரும்ப வழங்கப்படுகிறது. எனவே தனிநபர் வங்கி கணக்கு சம்பந்தமான விஷயங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்த தகவல்களை யாராவது தொலைபேசியில் கேட்டால், இது குறித்துரயில்வே பயணியர் உதவி தொலைபேசி எண், 138ல் புகார் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;