tamilnadu

img

பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்! “பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது”

சென்னை, மே 18- “பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“வெற்றி முகட்டை நோக்கி ‘இந்  தியா’ கூட்டணி பீடுநடை போடுவ தால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்து விட்டு நாளொரு பொய்ப் பரப்புரை  பொழுதொரு வெறுப்பு விதை எனப்  பிரதமர் மோடி பேசி வருகிறார். பிர தமரின் பொறுப்பற்ற பேச்சுகளை யும் அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதி யையும் நாட்டு மக்கள் அதிர்ச்சி யோடும் வேதனையோடும் பார்த்து  வருகிறார்கள்.

நாடு முழுவதும் ஒலிக்கும் குரல்....

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 விழுக்காடு என்  பதை நீக்க வேண்டும் என்று தமிழ்  நாட்டு மக்களும், சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்  நாட்டில் உள்ள அரசியல் கட்சி களும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியா லும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி களாலும் அகில இந்திய அள வில் எதிரொலிக்கத் தொடங்கி யிருக்கிறது.

மலிவான பிரச்சாரம்..
உத்தரப் பிரதேச மக்களுக்கும்  மிகவும் பயனளிக்கக் கூடிய இது குறித்து, பிரதமர் மோடி என்றைக்கா வது வாய் திறந்திருக்கிறாரா? அல்  லது ஏதாவது கேரண்டி கொடுத்தி ருக்கிறாரா? இல்லையே! ஆனால்,  வெறுப்புப் பரப்புரையை மட்டும்  முந்திக்கொண்டு செய்கிறார். மத வெறுப்புப் பரப்புரை கைகொடுக் காததால், அடுத்ததாக மாநிலங்க ளுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்தி ருக்கிறார்.

உத்தரப் பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசு வதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.

உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் – சமூகத்தில் பிளவுகளை உண்  டாக்கவும் செயலாற்றும் மணீஷ்  கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலா ளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்தி களை ஆதரிப்பதும் ஊக்குவிப்ப தும் பாஜக தான்.

ஏழைகளுக்கு எதிரானவர்! 
பயனற்றுப்போன வெறுப்புப்  பரப்புரைகளால் விரக்தியடைந் துள்ள பிரதமர் மோடி, சொல்லிக் கொள்ள பத்தாண்டுகால சாதனை கள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள்  நலத் திட்டங்களைக் கொச்சைப் படுத்தத் துணிந்து, அவர் எப்போ தும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

கோடிக்கணக்கான பெண் களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் விடியல் பயணத் திட்டத்தைப்  பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்தி ருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்  படுத்திய திட்டம் பயணச் சுதந்தி ரத்தைத் தந்ததோடு, பெண்களுக் குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்ட மில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.

உண்மை கிலோ என்ன விலை?

பிரதமர் பேசுவதைக் கவனித் தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம்  பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9  கோடியே 11 லட்சமாக உயர்ந்தி ருக்கிறதே தவிர குறையவில்லை.  சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக் கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.

பிற்போக்குத்தனமான வலது சாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ். பின்புலத்திலிருந்து வந்த வர் என்பதால் பெண்களின் முன் னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது. பாஜக வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்  தியா வெல்லும்! 

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

;