புதுதில்லி, நவ. 24 - ‘நீட்’ தேர்வு விதிகளை ஒன்றிய பாஜக அரசு மாற்றியுள்ளது. உயிரி யல் படிக்காதவர்களும் ‘நீட்’ தேர்வு எழுதலாம் என்று அறிவித்துள்ளது.
ஆங்கிலத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங் களை கூடுதல் பாடமாகப் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் பங்கேற்கலாம் என கூறியுள்ளது.
2020-க்கு முன்புவரை, இந்திய மருத்துவக் கவுன்சில், (Medical Council Of India - MCI) என்ற அமைப்புதான் மருத்துவப் படிப்பு களை ஒழுங்குபடுத்தி வந்தது. இந்த அமைப்பு, இளங்கலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஆங்கி லத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செய்முறை பயிற்சியுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து அல்லது தொடர்ச்சியாக படித்திருக்க வேண்டும் என்று விதிகளை வகுத்திருந்தது. இந்த இரண்டு ஆண்டு படிப்பு வழக்கமான பள்ளிக் கல்வி முறையில் இருக்கவேண்டும். திறந்தநிலை பள்ளிகள் அல்லது தனி யார் தேர்வாளர்களாக இருந்து படித்திருக்கக் கூடாது. மேலும், 12-ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பிறகு, உயிரியல் மற்றும் பயோடெக்னாலஜி படிப்பையோ அல்லது வேறு ஏதேனும் தேவையான பாடத்தையோ தனியாக எடுத்துப் படித்திருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்ற விதியையும்வைத்திருந்தது. நரேந்திர மோடி அரசானது, இந்திய மருத்துவக் கழகத்தை (MCI), 2020-இல் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) என்று பெயர் மாற்றி விட்ட நிலையில், இந்த புதிய ஆணை யம், தில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஒரு காரணமாக வைத்து பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகள்-2023ஐ உருவாக்கியது.
இதன்படி, இயற்பியல், வேதி யியல், உயிரியல் / பயோடெக்னா லஜி மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 10, +2 அல்லது அதற்கு இணையான தேர்ச்சியை பெற்ற வர்கள் ‘நீட்’ (NEET-UG) தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள் என 11(b) திருத்தம் மூலம் விதி முறையை மாற்றியுள்ளது.
எனவே, “பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மருத்துவப் படிப்புக்கு தேவையான இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தனியாக கூடுதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களும் இனி இளநிலை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவ்வாறு கூடுதல் பாடத்தில் தேர்ச்சி பெறுவோருக்கு என்எம்சி சார்பில் தகுதிச் சான்றிதழ் வழங்கப் படும். இதைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும்” என கூறப்பட்டுள்ளது.