விழுப்புரம், பிப்.13- விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை யிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் கோலியனூர் கூட்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாக னங்கள் செல்லும் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. இத னால் சாலை முழுவதும் குண்டும், குழியு மாக மாறிய நிலையில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப் போது விபத்தில் சிக்கும் அவலம் நீடிக்கி றது. இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத் துறை யை கண்டித்தும்; விக்கிரவாண்டி-கும்ப கோணம் நெடுஞ்சாலையை உடனடி யாக சீர் செய்ய வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பிர காஷ் தலைமை தாங்கினார். போராட்டத் தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டச் செய லாளர்கள் விழுப்புரம் சே.அறிவழகன், கடலூர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினர். விழுப்புரம் மாவட் டப் பொருளாளர் தேவநாதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சதீஷ்குமார், கிருஷ்ணராஜ், துணைத்தலைவர் தீர்த்தமலை உள்ளிட்ட ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.
165 கி.மீ.க்கு எத்தனை ஆண்டுகள்?
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், “விழுப் புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர், சேத்தியாத் தோப்பு, கும்பகோணம் வழியே செல்கிறது. இந்த சாலை வழியாக தின மும் ஆயிரக்கணக்கான கனரக வாக னங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றன. அது போல் என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள சுரங்கங்கள், அனல்மின் நிலையங் களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங் ங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்களில் இங்குள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் போக்குவரத்துக்கு மிக வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சாலை உள்ளது. ஆனால் இந்த சாலை கள் குறுகலாகவும், சாலையின் ஓரங் களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த தால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடை ந்து வந்தனர். இதை தவிர்க்க விக்கிர வாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை யிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 2010-ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய் யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு விக்கிர வாண்டி- தஞ்சாவூர் இடையேயுள்ள சாலை பணிக்காக முதற்கட்ட நிதி யாக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கினர். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு கூடுதலாக ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணி கள் தொடங்கப்பட்டன.
இந்த சாலை பணிகள் 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்திருந் தனர். ஆனால் பணிகள் மந்தமாக நட ந்து வருகிறது. தற்போது மேம்பாலங் கள், பாலங்கள், கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தாலும் கருங்கல் ஜல்லி, கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல் சாலையின் நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளது. இதுவரை சாலை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதை வாலிபர் சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது. உடனடி யாக சாலை பணியை விரைந்து முடிக்க ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.