tamilnadu

img

சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தது மக்களவைத் தேர்தல் முடிந்ததும் வாகன ஓட்டிகள் தலையில் சுமையேற்றிய மோடி அரசு

சென்னை, ஜூன் 2- மக்களவைத் தேர்தலுக் காக ஒன்றிய பாஜக அரசு நிறுத்தி வைத்திருந்த 36  சுங்கச்சாவடிகளின் கட்ட ணத்தை ஜூன் 3 ஆம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய  நெடுஞ்சாலைகள் ஆணை யத்தின் ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த  1992 ஆம் ஆண்டு அமைக்கப்  பட்ட தேசிய நெடுஞ்சாலை களுக்கும் ஏப்ரல், 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கும்ந செப்டம் பர் மாதம் கட்டணம் உயர்த் தப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 31  நள்ளிரவு 12 மணி முதல் சுங்  கச்சாவடிகளில் 5 முதல் 10  விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு  தேசிய நெடுஞ்சாலை ஆணை  யம் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தபட வேண்டிய சுங்கக் கட்டணம் மக்களவைத் தேர்தலால் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி சென்னை புற நகரில் உள்ள பரனூர் மற்றும்  ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவ டிகளில் கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒரு முறை பய ணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ. 110, மாதாந்திர கட்டணம் ரூ. 2,395. இலகு ரக சரக்கு வாக னங்கள் சிற்றுந்துகளுக்கான ஒரு முறை பயணம் செய்ய ரூ.115. ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பேருந்து,  சரக்கு வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.245, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ. 265, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர  சரக்கு வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று  திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாக னங்கள் 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.465, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க  மாதம் ரூ.340 உத்தேச கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது.

;