tamilnadu

img

ஆதாரத்தை வெளியிட்டு ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு பதிலடி!

சென்னை,ஜூலை 7- அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை விசாரிப்பது தொடர்பான கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை நகலை தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.சி.வீர மணி உள்ளிட்டோர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, ஒரு சில வழக்குகளில் சட்ட விளக்கம் கேட்டு இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீர மணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான கோப்புகள் எதுவும் எங்க ளுக்கு வரவில்லை என விளக்க மளித்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு, ஆளு நருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்ட தற்கான ஒப்புகை சீட்டை வெளிட் டுள்ளது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி ஆளுநரின் செயலாளர், கடிதம் பெற்றுக் கொண்டு ஒப்புகை அளித்த விவரம், அத்துடன் கடந்த 2022 செப்ட ம்பர் மாதம் 12ஆம் தேதி ஆளுநர் மாளி கைக்கு அனுப்பப்பட்ட கடிதம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை யும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. “கோப்புகளை பெற்றுக்கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கை யெழுத்து போட்டுவிட்டு அறிக்கை ஏதும் கிடைக்கவில்லை என்று கூறு வது ஆளுநர் அலுவலகத்திற்கு அழ கல்ல” என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

;