tamilnadu

img

பிஎன்எஸ் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்

சென்னை, பிப். 6 - பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்ற  புதிய சட்டத்தை முழுமை யாக திரும்பப் பெற வலி யுறுத்தி மத்திய தொழி லாளர் துறை ஆணை யரிடத்தில் ஓட்டுநர்கள் மனு அளித்தனர். ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) என்பதற்கு பதிலாக, பாரதிய நியாய சங்கீதா (பிஎன்எஸ்) என்ற புதிய சட்டத்தை நிறை வேற்றியுள்ளது. ஒட்டுநர் கவனக்குறைவு காரணமாக மரணம் ஏற்பட்டால் ஐபிசி  304ஏ பிரிவின் கீழ் அதிகபட் சம் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த 304ஏ-க்கு பதிலாக பிஎன்எஸ் சட்டத்தில் 106(1), 106 (2) என புதிய பிரிவு களை உருவாக்கி உள்ள னர். அதன்படி, ஓட்டுநர் மரண விபத்தை ஏற்படுத்தினால் பிஎன்எஸ் 106(1)ன் படி 2  ஆண்டுகளுக்கு பதில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். விபத்து நடந்த இடத்திலிருந்து ஓட்டு நர் தப்பித்து சென்றால் பிரிவு 106(2)ன் கீழ் 10 ஆண்டு  சிறை தண்டனை, 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும். இதற்கெதிராக வடமாநில ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தை யடுத்து ஒன்றிய அரசு சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

எனவே, இந்த சட்டத்தை முழுமையாக திரும்ப  பெற வேண்டும், மேலும், மாநில அரசின் ஆன்லைன் அபராதம், வாகன வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சாலை போக்கு வரத்து ஊழியர் சம்மேள னம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட சங்கங் கள் சார்பில் செவ்வாயன்று (பிப்.6) சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் துறை ஆணையரிடம் மனு  கொடுக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சம்மேளன மாநில துணைச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, துணை செயலாளர் ஏ.பி.அன்பழ கன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பால சுப்ரமணியம், சென்னை பெருநகர மோட்டார் வாகன  தொழிலாளர் சங்கம் துணை  பொதுச்செயலாளர் ஏ.ராயப் பன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மத்திய  சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முரு கேஷ், பொது செயலாளர் எம்.உதயகுமார், சென்னை மகாநகர் மோட்டார் வாகன  தொழிலாளர் சங்க மாவட்டப்  பொருளாளர் ஏ.எல்.கண்ணன், உரிமைக்குரல் ஜாகிர் உசேன், பாஸ்ட் ட்ராக் சாமி உள்ளிட்டோர் பேசினர்.

இதனைத் தொடர்ந்து சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் நலத் துறை ஆணையரிடம் தலை வர்கள் மனுவை அளித்த னர்.