tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்
சென்னை, மார்ச் 5- தமிழ்நாட்டில் கோடைக் காலம் முழுமையாகத் தொடங்கவில்லை. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக ரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்  நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்  றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது  அசவுகரியம் ஏற்படலாம் என்று சென்னை  வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீமானுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
பாரதிய பிரஜா ஐக்கியதா
தமிழகம்- புதுவையிலும் போட்டி

சென்னை, மார்ச் 5- கடந்த தேர்தலில் கரும்பு விவசாயி கள் சின்னம், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால்,  தற்போது அந்தச் சின்னத்தை கர்நாட கத்தைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கி யதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம்  ஒதுக்கி விட்டது. தில்லி உயர் நீதிமன்றம் சென்றும் சின்னம் கிடைக்கவில்லை. சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இது நாம் தமிழர் கட்சியின ருக்கும், சீமானுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் மக்கள வைப் பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதி களிலும் விவசாயி சின்னத்தில் போட்டி யிடப் போவதாக பாரதிய பிரஜா ஐக்கி யதா கட்சி முடிவு செய்துள்ளது என்று தக வல் வெளியாகியுள்ளது. இது சீமானுக்கு  புதிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நாம் தமிழர்  கட்சியின் சின்னமாக இருந்து வந்த விவ சாயி சின்னம் தேர்தலில் போட்டியிட்டால்,  அது நாம் தமிழர் கட்சியின் சின்னம் தான்  என்று நினைத்து மக்கள் அதில் வாக்க ளித்து விடும் அபாயம் உள்ளதால் தங்க ளின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் வெகுவாக குறைந்து போய்விடும் என்று  நாம் தமிழர் கட்சியினரும் கலக்கம் அடைந் துள்ளனர்.

தூத்துக்குடி தொகுதி: கனிமொழி விருப்ப மனு

சென்னை, மார்ச் 5 - தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் மீண்  டும் போட்டியிட விருப்பம் தெரி வித்து, சென்னை அண்ணா அறி வாலயத்தில் திமுக எம்.பி. கனி மொழி விருப்ப மனு தாக்கல் செய்  துள்ளார். இதுதொடர்பாக செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி, “தூத்துக்குடி தொகு தியில் 5 ஆண்டுகளாக பணி யாற்றி உள்ளேன். மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு உள்ளேன். மறுபடியும் அங்கு பணியாற்ற வாய்ப்பு கேட்டு உள்ளேன். வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை தெரி விப்பேன்” என்றார்.

நலவாரியத் தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்

சென்னை, மார்ச் 5- அதிமுக ஆட்சியின்போது நெல்லை மாநகர மேயராகவும், பிறகு மாநிலங்களவை எம்.பி. யாகவும் பதவி வகித்து வந்தவர்  விஜிலா சத்யானந்த். 2021-ஆம்  ஆண்டு திமுகவில் இணைந் தார். இந்நிலையில், விஜிலா சத்யா னந்த் கிறிஸ்தவ தேவாலயங்க ளில் பணிபுரியும் உபதேசியார் கள் மற்றும் பணியாளர் நலவாரி யத் தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார்.

ஆபாசக் கருத்து: எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை, மார்ச் 5- பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, கடந்த 2018-ஆம் ஆண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் மோச மான கருத்தை பதிவிட்டு இருந்  தார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், எச். ராஜா மீது பெண்களுக்கு எதி ராக ஆபாசமாக பேசுதல், பொது  அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கல வரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் நீதிபதி ஜெய வேல் முன்பு எச். ராஜா செவ்வா யன்று நேரில் ஆஜரானார்.