சென்னை,மே 7- கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள், முஸ்லிமாக மதம் மாறி பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்ற காட்சி அமைப்புகளுடன் எடுக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம் பியதால் சென்னை கோவையில் நிறுத்தப்பட்டது. இந்த திரைப்படம் தென்னிந்திய திரையரங்குகளில் கடந்த 5-ந்தேதி வெளியானது. இந்த படம் வெளி யானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்ப தாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் தான் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது. சென்னை யில் 13 திரையரங்குகளிலும், கோவை யில் 3 திரையரங்குகளிலும் படம் வெளி யானது. இதையடுத்து ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியான திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் படம் வெளியான கடந்த 5ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை யில் 4 இடங்களில் இந்தபோராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறை யினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் தி கேரளா ஸ்டோரி படம் ஓடும் திரையரங்குகள் முன்பு பரபரப்பான சூழல் நில வியது. இதனைத்தொடர்ந்து திரை யரங்குகளின் பாதுகாப்பு கருதி ஞாயிறு முதல் தி கேரளா ஸ்டோரி படத்தை நிறுத்தியுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு திரை யரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளி யாகி உள்ள திரையரங்கு முன்பு முற்றுகை போராட்டங்கள் நடை பெற்றுள்ளதால் திரையரங்குகளின் பாதுகாப்பு கருதி அந்த படத்தை நிறுத்துவது என்று முடிவெடுத் துள்ளோம் என்றார்.