tamilnadu

திருநீர் மலை ஏரியில் மீன்கள் இறந்ததால் கடும் துர்நாற்றம்

 சென்னை, ஜூன் 8- சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர் மலையில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 100 ஆண்டுகள் பழமையா னது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இந்த ஏரி உள்ளது. 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருநீர்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. மீன்பிடி துறைமுகமாகவும் விளங்கி வந்தது. இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக ஏரி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. தற்போது கடும் வறட்சியால் ஏரி வறண்டது. இதனால் ஏரியில் இருந்த மீன்கள் அனைத்தும் இறந்து மீதக்கின்றன. கடந்த ஒரு வாரமாகவே ஏரி முழுவதும் மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் ஏற்கனவே பேரூராட்சி யில் புகார் செய்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது திருநீர்மலை பேரூராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் மூலம் மீன்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. பேரூராட்சி ஊழியர்களுடன் பொதுமக்களும் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக இந்த பகுதி பொதுமக்கள் கூறுகை யில், ‘கடந்த 50 ஆண்டுகளாகவே இந்த ஏரியில் மராமத்து பணிகள் நடைபெறவில்லை. ஏரியை 10 அடி ஆழம் அளவுக்கு தூர்வாரி பராமரிக்க வேண்டும். அப்படி பராமரித்தால் திருநீர் மலை மட்டுமின்றி அனகாபுத்தூர், பம்மல், பல்லா வரம் பகுதிகளின் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும். மேலும் அந்த பகுதியை சுற்றிலும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றனர்.