tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் வீல் சேருடன் பயணிக்க நடத்துநர் உதவ வேண்டும்

சென்னை,ஆக.12- சென்னையில் ஓடும் புதிய தாழ்தள பேருந்து களில் மாற்றுத் திறனாளி கள் சக்கர நாற்காலியுடன் சென்று பயணம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இதனால் மாற்றுத் திறனாளிகளை ஏற்றி இறக்கு  வதற்கு ஓட்டுநர், நடத்துநர் களுக்கு மாநகர போக்கு வரத்து கழகம் அறிவுரை வழங்கி உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முற்படும் போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவ தற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி அவர் கள் ஏறுவதற்கு உதவி செய்ய வேண்டும்.

அதேபோல் மாற்றுத் திறனாளிகள் இறங்கும் போது சாய்தள படிக்கட்டை  இயக்கி சக்கர நாற்காலியு டன் பேருந்திலிருந்து பாது காப்பாக இறங்க உதவ வேண்டும். இதில் எவ்வித புகாரும் வராத வகையில் போக்குவரத்து ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.