tamilnadu

உண்மையை ஆராயாமல் திரித்து செய்தி வெளியிடுவதா? தினமலருக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

சென்னை, மே 16- “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தில்லி செல்ல அதிகாரி களுக்கு தடை” என்று மே 16  அன்று பிரபல (தினமலர்) நாளி தழ் வெளியிட்டுள்ள செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வருமாறு:-

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களி லும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாக தொடர்ந்து பங்  கேற்று தமிழ்நாட்டின் வாதங் களை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.

தில்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ கத்திற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்  துகள், தக்க புள்ளி விவரங்களு டன் வலுவாக எடுத்துரைக்கப் பட்டு வருகிறது. 

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94-ஆவது கூட்டம் புதுச்சேரியில் 21.3.2024 அன்று  நடைபெற்றது. அதில் தமிழ்நாட் டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தில்லி செல்ல அதிகாரி களுக்கு தடை” என்ற செய்தி மே 16 அன்று நாளிட்ட பிரபல  நாளிதழில் (தினமலர்) செய்தி  வெளியாகியுள்ளது. இதுபோன்ற  எத்தகைய உத்தரவும் தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவில்லை என  இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்  நாட்டின் உரிமைகளை நிலை நாட்ட தகுந்த வாதங்களை எடுத்து ரைத்து வருகின்றனர்.

மேலும், இக்கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ள தமிழ் நாடு அரசு தேவையான அனு மதி உடனுக்குடன் அளித்து வரு கிறது. இவ்வாறு இருக்கையில்  செய்தியின் உண்மைத்தன்மை யை ஆராயாமல் திரித்து கூறு வது ஒரு பிரபலமான நாளித ழுக்கு உகந்ததல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.