tamilnadu

img

தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கை! - முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின்

இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை . மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக் கொள்ள மாட்டோம். இந்தியை ஏற்காவிட்டால் நிதி தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம். இது பண பிரச்சனை அல்ல இன பிரச்சனை. நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல.

மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.