புதிய கல்விக் கொள்கையின் பாதகமான அம்சங்களை விளக்கும் வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆர்.கே. நகர் பகுதிக்குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரையாற்றினார். சங்கத்தின் தலைவர் கு.தயாளன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்டத் தலைவர் நா.வே.அருள், செயலாளர் தி.ராஜேந்திரகுமார், ப.அருள், சுகந்திரன், ரங்கன் ஆகியோர் பங்கேற்றனர்.