tamilnadu

img

பொறியியல் கல்லூரி தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: அமைச்சர் க.பொன்முடி

சென்னை,ஆக.25 அண்ணா பல் கலைக்கழக செம ஸ்டர் (பருவ) தேர்வுக் கூட்டண உயர்வு நிறு த்தி வைக்கப்படுவ தாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொ ன்முடி அறிவித்துள் ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம் 50 விழுக் காடு வரை உயர்த்தப்பட்டு அறிவிக்கப் பட்டது.

தன்னாட்சிக் கல்லூரிகளில் பட்டப் படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப் பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டது.

 தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டது. 

முதுநிலை பட்டங்களுக்கு ரூ.450ல் இருந்து ரூ.670 ஆக உயர்கிறது. புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை கிண்டி யில் அமைச்சர் க.பொன்முடி செய்தி யாளர்களை சந்தித்தார்.

அப்போது, “அண்ணா பல்கலைக் கழக பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது. தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும்.தேர்வு கட்டணத்தை உயர்த்து வது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது”என்றார்.