tamilnadu

img

கண்காணிப்பு கேமரா காட்சிகள் பாதுகாப்பு... தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு...

சென்னை:
காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-விசாரணை கைதிகள் காவல் நிலையத்திற்குள் கடுமையாக தாக்கப்படுவது, தங்கள் அதிகாரத்தை மீறி காவல்துறையினர் செயல்படுவது என காவல் நிலையங்களில் சமீபகாலமாக மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது.இதனை தடுப்பதற்கு காவல் நிலையங்கள் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம்.சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை-மகன் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் கையாண்டதால் ஆதாரங்களை அழித்துள்ளனர்.

எனவே, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதோடு, அதை முறையாக பராமரிப்பதற்கும், கண்காணிப்பு கேமராவால் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினர் அழிக்காமல் பாதுகாத்து வைப்பதற்கும் தேவையான திட்டங்களையும், விதிகளையும் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளி  வைத்தனர்.