tamilnadu

img

நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் கல்வி நிறுவன குழுமத்தின் சார்பில்  ஏ.செட்டிப்பள்ளி, அக்கொன்டப்பள்ளி கிராமங்களில் உள்ள 1,100 பேருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், வேளாண்மைக் கல்லூரி மேலாளர் காளமேகம், முதல்வர் விஜயராகவன், சூளகிரி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், ஏ.செட்டிப்பள்ளி கூட்டுறவு சங்கத் தலைவர் மாதேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.