யோகா பயிற்சியில் உணவை உண்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு
கடலூர், ஜூன் 20 - என்எல்சி நிறுவனத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள என்எல்சி ஜவகர் பள்ளி, செயின் பால், மகரிஷி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர்.என்எல்சி பாரதி விளையாட்டு அரங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளிக் கிழமை யோகா ரிகர்சல் பயிற்சியில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களுக்கு என்எல்சி நிறுவனம் சார்பில் உணவு பண்டங்கள் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில், ஜவகர் பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பள்ளியில் மயங்கி விழுந்தனர். பின்னர் ஆசிரியர்கள் என்எல்சி ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர்கள் மாண வர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். யோகா பயிற்சி போது வழங்கப்பட்ட உணவு பண்டங்களை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.