சென்னை, ஆக.31- மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டது
அதன்படி, சனிக்கிழமை (ஆக.31) ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுவடைந்தது. இது மேலும் மேற்கு-வட மேற்குத் திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆகஸ்ட் 31 நள்ளிரவு கலிங்கப்பட்டினம் அருகே விசா கப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வலுவான தரைக்காற்று 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடை இடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.