tamilnadu

img

கூடுதல் விலைக்கு பால் விற்பனை கடும் நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ்

மழையால் பாதிப்புள்ள பகுதிகளில் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சடிக்கை விடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனை காரணமாக வைத்து கடைக்காரர்கள் பலரும், ஆவின் பால் 1 லிட்டர் ரூ.100, ரூ.120 என கடுமையாக விலையை உயர்த்தி விற்பனை செய்துவருவதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சடிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இக்கட்டான சூழலில் மக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.