சென்னை,நவ.26- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதி கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் அரசு மேற் கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையில் வேதாரண்யம் பகுதியில் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங் களில் அரசு மேற்கொண்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையில், தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரி வித்தது.
குறிப்பாக, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுத லாக மழைப்பொழிவு ஏற்படக் கூடும். எனவே, கன மழையை எதிர் கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. மேலும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத்துறை இயக்குந ருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர் களுக்கு நவ.23 அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1,192 படகு கள் கரை திரும்பியுள்ளன. மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல, ஆழ்கட லில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அலுவலர்கள்
கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங் களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கி ணைந்து கண்காணித்திட, நாகப் பட்டினம் மாவட்டத்திற்கு ஜானி டாம் வர்கீஸ், (94999 56205, 88006 56753), மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கவிதா ராமு, (90032 97303), திரு வாரூர் மாவட்டத்திற்கு காயத்ரி கிருஷ்ணன், (73388 50002), கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.எ. ராமன், (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை
நிவாரணப் பணிகளை மேற்கொள் ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப் பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல் வேலி மாவட்டத்தில் நிலை நிறுத்தப் பட்டுள்ளன. இது தவிர, தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடி யாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.
மாநில மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள் மூலம், கன மழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங் களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பின்வ ரும் எண்களில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 வாட்ஸ்அப் 94458 69848
மேலும், கனமழை எச்சரிக்கை யைத் தொடர்ந்து, தாழ்வான பகுதி களில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லு மாறும், வெள்ள பாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங் களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அறிவுறுத்தல்
மேலும், விவசாயப் பெருமக்கள், பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப் போர் கனமழை எச்சரிக்கைக்கு ஏற்ற வாறு தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படு கிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதி யோர், குழந்தைகள், மாற்றுத்திற னாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்து மாறும், குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.