சென்னை, பிப்.5- ஐடிஎப்சி சொத்து நிர்வாக நிறுவனம் சிறு முதலீட்டு நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதற்காக – ஐடிஎப்சி எமர்ஜிங் பிசினஸ் பண்ட் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வளர்ச்சி வாய்ப்புள்ள இந்த நிதியத்தில் திரட்டப்படும் நிதியானது சிறு நிறுவன பங்குகளில் குறிப்பிட்ட தர அளவீடுகளின் அடிப்படையில் முதலீடு செய்யப்படும். மேலும் இந்த நிதியில் திரட்டப்படும் தொகை யில் 65 சதவீதம் சிறு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடானது பங்குகளை உத்திசார் அடிப்படையில் வாங்கி அதை வைத்திருந்து அதிக விலைக்கு வரும்போது விற்பனை செய்யும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிதியத்தின் மூலம் திரட்டப்ப டும் தொகையானது புதிய நிறுவன பங்கு வெளியீடுகளிலும் (ஐபிஓ) முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஐடிஎப்சி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.