tamilnadu

img

மறைந்த தோழர் கே.மனோகரனுக்கு மாநில செயலாளர் பெ.சண்முகம் அஞ்சலி

மறைந்த தோழர் கே.மனோகரனுக்கு மாநில செயலாளர்  பெ.சண்முகம் அஞ்சலி

ருப்போரூர், மே 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மூத்த தோழர் கே.மனோகரன் (வயது 63) ஞாயிறன்று காலை ஹிமாச்சல பிரதேசம், கன்கரா-வில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவமனையில் கடந்த ஒருமாத காலமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.  விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட அவரது உடல் திருப்போரூர் தண்டலம் பகுதியில் அவரது சகோதரர் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி லிங்கன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தோழர் மனோகரன் மனைவி சாந்தா, மகள் மருத்துவர் ஜோதி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.  இதனைத் தொடர்ந்து கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு செயலாளர் எம்.செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், காஞ்சி புரம் மாவட்ட செயலாளர் கே.நேரு, தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநில குழு உறுப்பி னர்கள் இ.முத்துக்குமார், பி.சுந்தரராஜன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மற்றும் கட்சியின் மாவட்ட செயற் குழு, மாவட்ட குழு, இடைக்கம்பட்டி செயலாளர்கள், கிளை செயலாளர்கள், வெகுஜன அமைப்பின் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் மனோகரின் இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று மாலை அவர் இல்லத்தில் நடைபெற்றது.