tamilnadu

பெண் திரைக்கலைஞர்கள் குறித்து அவதூறு காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

சென்னை, செப். 16 - பெண் திரைக்கலைஞர்கள் குறித்து  அவதூறாகப் பேசியதாக டாக்டர் காந்த ராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் திரைக்கலைஞர் ரோகிணி அளித்த புகாரின் பேரில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் பெண் திரைக்கலை ஞர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டு ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இதேபோல, தமிழ்த் திரையுலகிலும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக, யூடியூப் சேனலுக்கு பேட்டி யளித்த மருத்துவர் காந்தராஜ், படத்தில் நடிக்கும்போது அனைத்துக்கும் ஓகே சொல்லிவிட்டு, 30 ஆண்டுகளுக்கு பிறகு புகாரளிப்பதாக பெண் திரைக்கலைஞர்கள் மீது எதிர்க் குற்றச்சாட்டு வைத்தார். மேலும் பெண் திரைக்கலைஞர்கள் சிலரது பெயர் களையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, காந்தராஜ் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி, திரைக் கலைஞரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘விசாகா’ கமிட்டி தலை வருமான ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில், ஆன்லைன் வழியாக புகாரளித்தார். அந்த புகாரில், “’மை இந்தியா’ (“MY INDIA 24X7) என்ற யூடியூப் (YOU TUBE) சேனலில் பேசியுள்ள மருத்து வர் காந்தராஜ் நடிகைகளை ஒட்டு மொத்தமாக கீழ்த்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளிகள் என்று பேசியுள்ளதை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

இது கண்டிக்கத்தக்கது. மறைந்த பெண் திரைக்கலைஞர்கள் முதல் தற்போதுள்ளவர்கள் வரை, அவர்களைப் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றி பேட்டியளித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல், தொடர்பையும் கூட  கொச்சைப்படுத்தியுள்ளார். நடிகைகள் என்றால் கேமிராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் தான் நடித்து வரு கின்றார்கள் என்பது போல பேசி யிருப்பது வேதனையளிக்கும் வகை யில் உள்ளது.

அவரது பேச்சு நடிகை களை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், சினிமாவில் நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களுக்கு தவறான வழிகாட்டுதலையும் தருவதாக உள்ளது. இதுதவிர கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். மருத்துவர் காந்தராஜ் தன் வயதிற்கும் கல்வித்தகுதிக்கும் சம்பந்தமே இல்லாதவாறு நடிகை களின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு களை முன்வைத்தது தண்டனைக்குரிய குற்ற செயலாகும். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு யூடியூப்பில் உள்ள அவரது பேட்டியை நீக்க வேண்டும்” என்று ரோகிணி கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை ரோகிணி யின் புகாரின் பேரில், மருத்துவர் காந்த ராஜ் மீது, பொது இடத்தில் ஆபாச மாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.