சென்னை,செப்.2- சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி யில் ஐஏஎச்வி உடன் இணைந்து திறன் மேம்பாட்டு மையத்தை பிஎன்ஒய்மெ லான் திறந்துள்ளது. நிறுவன சமூகப்பொறு ப்புத்திட்ட த்தின் ஒருபகுதி யாக கல்லூரி மற்றும் மனித மாண்புகளுக்கான சர்வ தேச சங்கம் (ஐஏஎச்வி) ஆகியவற்றோடு இணைந்து இந்த மையம் தொடங்க ப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் தொழில்துறை யில் பணியாற்ற தயார் நிலை யில் இருப்பதற்கு தேவை யான ஆட்கள் இம் மையத்தால் உருவாக்க ப்படும். அத்தியாவசிய மென் திறன்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் 8 ஆயிரத்திற்கும் அதிக மான இளம் தலைமுறையின ருக்கு கற்பிப்பதை தனது இலக்காக கொண்டுள்ளதாக துவக்க நிகழ்ச்சியில் பேசிய பிஎன்ஒய் மெலான் இன்டர் நேஷ்னல் ஆபரேசன்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் சுதீஷ் பணிக்கர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த படித்த மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி யின் முதல்வர் ரோஸி ஜோசப் தெரிவித்தார். ஐஏஎச்வி தலைமை செயல் அலுவ லர் ரமேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்தநிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.