tamilnadu

img

மதுரையில் நகரில் கடைகள் அடைப்பு....

மதுரை:
“பாரத் பந்த்”-க்கு மதுரை வர்த்தகர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தாமாக முன் வந்து கடைகளை அடைத்து ஆதரவளித்தனர். பிரதான பகுதிகளான மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசிவீதி, டவுன்ஹால் ரோடு, மீனாட்சி பஜார், பாண்டி பஜார்,காளவாசல், தத்தனேரி உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சிபிஐ, காங்கிரஸ்மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி,இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் கட்டபொம்மன்சிலை அருகில் திமுக மாவட்டச் செயலாளர் பொன். முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.சரவணன், திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.கார்த்திகேயன், பார்வர்ட் பிளாக்மாநிலச் செயலாளர் பி. வி.கதிரவன், விடுதலைச்சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் பா. கதிரவன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியார் பேருந்துநிலையம் பாண்டி பஜார் அருகில் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மா.கணேசன், கே.வசந்தன், ஜா.நரசிம்மன், இரா.லெனின், மா.பாலசுப்பிரமணியம், வை.ஸ்டாலின், ஆர்.சசிகலா, பகுதிகுழுச் செயலாளர்கள் பி.ஜீவா, டி.குமரவேல், கா.இளங்கோவன், ஏ.எஸ். செந்தில்குமார், ஜெ.லெனின், யூ.எஸ்.அபுதாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம்
அவனியாபுரம், சிந்தாமணி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.சேதுராமு, வீரபத்திரன் மருதுபாண்டி உள்ளிட்ட தோழமைக்கட்சியினர் கலந்து கொண்டனர்.சிந்தாமணியில் தனபால் (திமுக) தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.முருகன் ராஜப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;