சென்னை, ஏப்.3 - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவித்த பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு விடுதலை செய்தது.
இவர்களில் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இதில் சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28 அன்று உயிரிழந்தார். இந்நிலையில், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 3 பேரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.2) சென்னை அழைத்து வரப்பட்டனர். பின்னர், 3 பேரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை அனுப்பி வைக்கப்பட்டனர்.