tamilnadu

img

சுயநிதி மருத்துவக் கட்டணம்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு...

புதுதில்லி:
சுயநிதி மருத்துவக் கல்விக்கான கட்டணம் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அனைத்து கல்லூரிகளும் அதிக கட்டணம் வசூலிக்கவில்லை என்றும் அரசு மனுவில் தெரிவித்துள்ளது. கட்டணம் நிர்ணயிக்கும் குழு தீர்மானித்த கட்டணங்களை மறுஆய்வு செய்யஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சுயநிதி கல்லூரிகள் கோரும் அதிகபட்ச கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும் என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் படிப்பைமுடிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசு கோரியுள்ளது.

;