சென்னை, மார்ச் 8 - மகளிர் தினத்தையொட்டி சமை யல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், இது தேர்தலுக்காக மோடி அரசு ஆடும் கபட நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டி ருப்பதாவது:
9 ஆண்டாக மகளிர் தினம் வரவில்லையா?
வருடந்தோறும் மகளிர் தினம் வருகிறது. மோடிக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் மகளிர் பற்றி நினைவு வருகிறது. 2014-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விலையை ஏற்றி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பாக்கெட்டிலிருந்து வரியாக கொள்ளையடித்த மோடி அரசாங்கம் இந்த ஆண்டு மக்க ளவைத் தேர்தல் வருவதை மனதில் கொண்டு சமையல் எரிவாயு விலை யில் வெறும் ரூ.100-ஐ குறைத்து விட்டு மகளிர் தினத்திற்காக என்று மாய்மாலம் செய்கிறது. அப்படி யானால் 2014-இல் இருந்து நேற்றைய தினம் வரை மகளிருக்கு சுமை கூடவில்லையா?.
ரூ.410 என்ற விலையை ரூ.1000-ஆக உயர்த்தியது யார்?
2014-ஆம் ஆண்டு இவர்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ரூ. 106 டாலராக இருந்தது. அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 410 மட்டுமே. ஆனால், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை 86 டாலராக குறைந்துள்ள நிலை யில், சமையல் எரிவாயு விலையை ரூ. 1000-க்கு உயர்த்தி கொள்ளை யடித்த அரசுதான் மோடி தலைமை யிலான பாஜக அரசு. தற்போது ஒரு சிறு துரும்பு அளவு தேர்தல் உள்நோக்கத்தோடு குறைத்து விட்டு மகளிருக்காக செய்யும் உதவி என்று சொல்வது அப்பட்டமான மோசடி யாகும்.
ரூ. 26.73 லட்சம் கோடி வரியாக வசூலித்து கொள்ளை
சமையல் எரிவாயு என்றால் அது பெண்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே என்று மோடி அறிவிப்பது ஆணாதிக்கத் தின் வெளிப்பாடாகும். பெண்களை சமையல் அறையில் கட்டிப்போடும் வர்ணாசிரமத்தை தூக்கி கொண்டாடு வதாகும். 2014ம் ஆண்டு பெட்ரோலி யப் பொருட்கள் மூலம் ரூ. 1,26,025 கோடியாக இருந்த ஒன்றிய அரசின் வரி அதிகபட்சமாக 2021-2022ல் ரூ. 4,31,609 கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ, 26,73,978 கோடி மக்களிடமிருந்து வரியாக மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரூ. 100 குறைப்பு தேர்தல் கபடநாடகமே...
ஒவ்வொரு முறை விலையேற்றப் படும் போதும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இதர பல கட்சிகளும் அதை எதிர்த்தும், போராடியும் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களும் போராடியுள்ளனர். சர்வதேச சந்தையில் உக்ரைன் போரையொட்டி பெட்ரோலியப் பொருட்களின் விலை பாதியாக குறைந்த போதும்கூட ஒன்றிய அரசு சமையல் எரிவாயு விலையை குறைக்க முன்வரவில்லை. தான் எதிர்கட்சியாக இருந்தபோது சமை யல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக வீதி தோறும் போராடிய பாஜக, 9 ஆண்டு காலம் மக்கள் போராடிய போதும் செவி சாய்க்காமல் இருந்து விட்டு தற்போது ரூ. 100-குறைத்து விட்டதாக பம்மாத்து செய்வதி லிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறி வார்கள்.
ரூ. 500 ஆக குறைக்க ‘மோடி கேரண்டி’ உண்டா?
மக்கள் நலனில் மோடி அரசுக்கு உண்மையான அக்கறை இருக்கு மானால் கடந்த டிசம்பரில் நடை பெற்ற ஐந்து மாநில தேர்தல் வாக்குறு தியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் மாதம் சத்தீஸ்கரில் ‘மோடியின் கேரண்டி’ என்று வாக்கு றுதி அளித்தது போல ரூ. 500-ஆக சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்து கிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.