சென்னை, நவ.9- ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப் படும் என சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தெரி வித்தார்.
இது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர் களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தீபாவளியையொட்டி ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே இருப்புப் பாதை காவலர்கள் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்களில் பயணிகள் பட்டாசுகள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். அதை மீறி, பட்டாசு கொண்டு செல்லும் பயணி களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப் படும். பெண் பயணிகளின் பாது காப்பை வலியுறுத்தும் வகையில் மின்சார, விரைவு ரயில்களில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பொருட் களை வாங்கிச் செல்லும் பயணிகள் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். இதுபோன்ற பண்டிகை காலங்களில் வெளி மாநிலங்களில் இருந்து திருட வரும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை நியமிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு
மேலும், ரயில்களில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை, இருப்புப் பாதை காவலர்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி களில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏறுவதை தடுக்கும் வகையில் அவர்கள் மாற்று ரயிலில் செல்ல வழிவகை செய்யப்படுகிறது. தீபாவளியையொட்டி சென்னை கோட்டத்தில் உள்ள 245 ரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.