சென்னை ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,091 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. 13,170 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மொத்தமாக 16,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 135 பேர் உயிரிழந்துள்ளனர்; 8,506 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 31 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 2,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 19 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 1,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 26 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 1,411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 பேர் உயிரிழந்துள்ளனர்.