உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஓய்வறை
ட்டார விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு ஓய்வறை அமைக்கப்பட்டு பயன்பட்டிற்கு வரவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே வேடபாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் 1972ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தில் உத்திரமேரூர் பகுதியில் சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மற்றும் பிற விலைப் பொருட்களை நேரடியாக உத்திர மேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து செய்து வருகின்றனர். இந்த விற்பனை கூடத்தில் மற்ற விற்பனைக்கூடத்தை காட்டி லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது. இதற்காக உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மற்றும் பெருநகர், அரசாணிமங்கலம், அகரம்தூளி, கருவேப்பம்பூண்டி, திருப்புலி வனம், ஈசூர், சிலாம்பாக்கம், மானாமதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வருகின்றனர். தானியங்களை விற்பனை செய்து அதற்கான விலை விவ ரங்கள் தெரிந்து கொள்ளவும், மேலும் விற்பனை செய்த தொகை தங்களது வங்கிக்கணக்கில் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் காலை முதல் மாலை வரை விவசாயிகள் விற்பனைக்கூடத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் ஓய்வெடுக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாக பகுதியில் ஓய்வெடுக்க இடம் இல்லாததால் மரத்தடியில் தங்கி ஓய்வெடுத்து விவசாயிகள் அவதிப்படு கின்றனர். இந்நிலையில், உத்தரமேரூர் வட்டார விவசாயிகள் சார்பில் சிபிஎம் காஞ்சி புரம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கே.பெரு மாள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். இதன் பயனாக, உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தனி கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை ஒன்றை ஏற்படுத்தி உள்கட்ட மைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது அப்பகுதி வட்டார விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியருக்கும் அப்பகுதி விவ சாயிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.