tamilnadu

img

மேட்டூர் அணை நீரில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் மீட்பு

மேட்டூர்,  ஜூலை 17 சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, அதன் முழுக் கொள் ளவான 120 அடியை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து அதன் உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நீர் செல்லும் பாதையில் வசிக்கும் பொதுமக்களிடம், ‘நீர் அதிகளவிலாக வந்து கொண்டுள் ளது. பொதுமக்கள் யாரும் நீர் செல்லும் பாதையில் செல்ஃபி எடுக்க வோ, சுற்றிப் பார்க்கவோ வேண்டாம்’ என எச்சரிக்கை விடுக் கப்பட்டது. இதற்கிடையில் காலை 50,000 கன அடியாக நீர் வெளியேற்றப் பட்டது. மேலும் படிப்படியாக நீர் வரத்தானது முழுவதுமாக அப்ப டியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் சின்ன கண்ணூர் பகுதி யில் உள்ள மூன்று கல்லூரி மாண வர்கள் செல்ஃபி எடுப்பதற்காக நீர் செல்லும் பகுதிக்குச்சென்றுள்ளனர்.அப்போது, அதிக அளவில் நீர் வந்ததால் நீரின் நடுவில் மூவரும் சிக்கிக்கொண்டனர். உடனடியாக இதனையறிந்த காவல் துறை யினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் மூவரை யும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர், மூன்று பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவ்வாறு வெள்ளத்தில் சிக்கியது சேலம் மாவட்டம் தார மங்கலத்தைச் சேர்ந்த பிரபு, தினேஷ், ரவி என்னும் மூன்று இளைஞர்கள் ஆவர். மீட்கப்பட்ட இவர்களை, முதலுதவி சிகிச் சைக்காக மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு காவல் துறையினர் அழை த்துச்சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.