tamilnadu

வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு

அம்பத்தூர், மே 17- பூந்தமல்லி அருகே காட்டுப் பாக்கம் இந்திரா நகர் பகுதியில் ஏராள மான குடியிருப்புகள் உள்ளது. அப் பகுதியில் கிருத்திகா என்பவரின் வீட்டை, பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து நாய்களை வைத்து பராமரித்து வருகிறார். அதுமட்டுமின்றி வெளியூர் களுக்கு செல்பவர்கள் மற்றும் வீடுக ளில் பராமரிக்க முடியாத நாய்களை பிரியாவிடம் கொடுத்து விடுவார்கள். அவர் குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு, நாய்களுக்கு உணவு வழங்கி பராமரிக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்க ளாக இந்த வீடு பூட்டப்பட்டு இருப்ப தால், பராமரிக்கப்பட்டு வந்த நாய் களுக்கு முறையாக உணவு  வழங்கா மல் இரவு முழுவதும் நாய்கள் குரைத்து  கொண்டே இருந்துள்ளது. மேலும் பரா மரிப்பதற்காக விடப்பட்ட நாய்களுக்கு நோய் உருவாகி, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் காயம் அடைந்தும், மிகுந்த துர்நாற்றம் வீசி வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை விலங்குகள் நலவாரிய அமைப்பில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் மதன கோபால் என்பவர் தலைமையில் விலங்குகள் நல வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயங்களுடனும், பராமரிப்பின்றி இருந்த 18 நாய்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அவைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;