சென்னை, ஆக. 4- வாடகைதாரர்களிடம் இருந்து வீட்டு வாடகையை உரிமையாளர்கள் வசூலிக்க கூடாதென உத்தர விடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றம் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண் டர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24- ம் தேதி முதல் அறிவித்துள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, குடியிருப்பு வாசிகளிடம் இருந்து வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மார்ச் 29- ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மை சட்டம், அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. ஆனால் பெரும்பா லான வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை கூட விடாமல் வசூல் செய்துள்ளனர்.
வாடகை செலுத்தாதவர்கள் காலி செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்று காலத்தில், இதுபோன்ற நடவடிக்கை கள் நோய் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். ஆகவே, பெருந் தொற்று காலத்தில் வாடகை வசூல் செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் கேட்டுக்கொண்டி ருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் ,ஹேமலதா அமர்வு இது சாத்தியமில்லை என்றும் இதே போல தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரி வித்தார், மேலும் நீதிமன்றத்தின் முன்பு வாடகைதாரர் வீட்டு உரிமையாளர்கள் யாரும் வழக்குத் தொடர வில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது பொது நல வழக்கு ஆகாது என்றும் தெரிவித்த னர். மேலும் அரசினுடைய அறிவிப்பு தொழிலா ளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர் என்று தெரி விக்கப்பட்டிருக்கிறது எனவே இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாகவும், மனுதாரருக்கு அப ராதமும் விதிக்கப் போவதாக எச்சரித்தனர். இதையடுத்து வழக்கு நாளை ஒத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வழக்கு செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.