திருவண்ணாமலை,நவ.20- திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் அருண் பாட்சா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜோதி சங்கர் வரவேற்றார். ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் ஆர். மனோகரன் துவக்க உரையாற்றினார். சமூக செயற்பாட்டாளர் மற்றும் ஊடகவியலா ளர் கே. கனகராஜ் கருத்துரை நிகழ்த்தினார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிர மணியன் நன்றி கூறினார்.