tamilnadu

img

பண்ருட்டியில் பிரச்சார இயக்கம்

எல்ஐசி இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க கோரியும், எல்ஐசி யை தொடர்ந்து பொதுத்துறையில் பாதுகாக்க வலியுறுத்தியும் அந்நிய நேரடி முதலீட்டு திட்டத்தை கைவிட வேண்டியும் பண்ருட்டியில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சங்கத் தலைவர் கே.பி.சுகுமாறன் தலைமை தாங்கினார். வேலூர் கோட்டை இணைச் செயலாளர்கள் ஜெயபிரகாஷ், ஜி.வைத்திலிங்கம், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.