tamilnadu

img

தென்பெண்ணையாற்றில் தடுப்பணை: விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம்.ஜன.3- விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் அருகே  உள்ள தெளி, லட்சுமிபுரம், கப்பூர், வெண்மணி யாத்தூர், சத்திப்பட்டு, கொண்டங்கி, வெங்க டேசபுரம், தோகைப்பாடி, நன்னாடு, ஆலத்தூர், வேம்பட்டு, விராட்டிக்குப்பம், பாளையம், கோனூர், கொத்தமங்கலம், பெரும்பாக்கம், காணை, கருங்காலிப் பட்டு, சிறுவாக்கூர் ஆகிய 19 கிராமங்களை  சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட விவசாயிகள்  வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு வந்தனர். அனைவரும் திடீரென  மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது மாவட்டத்தில் பருவமழை காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்ப டுத்த மாவட்டத்தில் பாய்ந்தோடும் தென்பெண்ணையாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  இதுகுறித்து தகவல் அறிந்தத விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதோடு, விவசாயிகள் 5 பேரை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் அழைத்துச் சென்றனர்.  

அப்போது விவசாயிகள் மாவட்ட ஆட்சிய ரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த  மனுவில் கடந்த 5 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்ட  காரணத்தினால் ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் குடிநீர் மற்றும்  விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கிராம ஏரி, குளங்களுக்கு தண்ணீர்  வராததற்கு காரணம் தென்பெண்ணை யாற்றில் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மணலை எடுத்துள்ள தால் சுமார்  15 அடி ஆழத்திற்கு ஆறு, பள்ளமாகி விட்ட தாலும் வாய்க்கால் மேடாக உள்ளதாலும் ஆற்றுக்கு தண்ணீர் வந்தாலும் எங்கள் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் வழியே தண்ணீர் ஏரிகளுக்கு வருவது கிடையாது. தென்பெண்ணையாற்றில் பள்ளமான பகுதிகளை ஆய்வு செய்து வாய்க்கால் பிரி யும் தெளிமேடு பகுதியில் உள்ள தென் பெண்ணை யாற்றில் தடுப்பணை அமைத்து வாய்க்கால்களை சீரமைத்து கிராம ஏரி, குளங்  களுக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே எங்கள் கிராம குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வு கிடைக்கும். அதேபோல் விவசாயத் தொழிலும் செய்ய  முடியும். இதற்கு தாங்கள் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். எனஅந்த மனுவில் கூறி  உள்ளனர். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சி யர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகக்  கூறினார். இதையடுத்து விவசாயிகள் அனை வரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

;