தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், சென்னையில் செவ்வாயன்று (ஆக.6) ‘தனியார் மயம், ஒப்பந்த முறை எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி, மதிமுக பொருளாளர் மு. செந்தில் அதிபன், விசிக துணைப்பொதுச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். (செய்தி :5)