tamilnadu

img

சீனாவுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும்... மத்திய அரசு தகவல்

புதுதில்லி:
 சீனாவுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும்என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

லடாக் மோதலால் இந்தியா-சீனா எல்லையில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரவும் அமைதியை நிலைநாட்டவும் இருநாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாகஇருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை நவம்பர் 6 அன்று நடைபெற்றது.இந்த நிலையில் இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘இரு நாடுகளும் தூதரகம் மற்றும் ராணுவம் மூலம் தொடர்பையும், பேச்சுவார்த்தையையும் தொடர ஒப்புக்கொண்டுள்ளன. அங்கு படைகளை விலக்கி அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் முடிவு செய்துள்ளன என்று தெரிவித்தார்.லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை வெளியேற்ற சீன ராணுவம் நுண்ணலை ஆயுதங்களை பயன்படுத்தியதாக இங்கிலாந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி ஆதாரமற்றவை என்றும் இதுகுறித்து ராணுவம் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டதாகவும் உறுதிபட கூறினார்.