சென்னை, நவ.7- அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட னர். ஆனால், அவர்கள் தரப்பினர் அதிமுக கொடி மற்றும் சின்னம் பயன்படுத்தி வந்தனர். இது தொடர் பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை செவ்வாயன்று (நவ. 7) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் விசாரித் தார். அப்போது,“ மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் எங்கள் கொடி, சின்னம், பெயர் பயன்படுத்தி கட்சியினர், மக்கள் மத்தியில் ஓ.பி.எஸ்., தரப்பினர் குழப்பம் ஏற் படுத்துகின்றனர்’’ என பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, “அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம் கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்”.
மேலும், “ஓ.பி.எஸ்., தரப்பு வழக்கறிஞரிடம், “எத்தனை முறை ஒரே வாதத்தை முன் வைப்பீர்கள், எத்தனை முறை நேரம் கேட்பீர்கள், எத்தனை முறை வழக்கு தொடர் வீர்கள்”என்று நீதிபதி சதீஷ்குமார் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கால அவகா சம் கோரி பன்னீர் செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை நிராகரித்தார்.