tamilnadu

img

அமைச்சர்களை வைத்து வழங்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள்

சென்னை:
கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட வேண்டிய மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உபகரணங்கள் மாவட்டங்க
ளில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

வாகனம் வழங்காமலேயே 2-வது சர்வீசுக்கு வரச்சொன்ன கொடுமைதருமபுரி மாவட்டத்தில் இணைப்பு சக்கரம் பொறுத்தப் பட்ட சுமார் 50 டிவிஎஸ் ஸ்கூட்டி வாகனங்கள், AVC டீலர் நிறுவனத்தில் வெயில் மற்றும் மழையில் 6 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதைப் போன்று ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளதும் தெரிகிறது.  வாகனங்களை வழங்காமலேயே, 2-வது சர்வீஸ் செய்ய வாகனத்தை கொண்டு வருமாறு AVC டீலர் நிறுவனம்  பயனாளிகள் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. டீலர் நிறுவன அதிகாரிகளிடம் எமது சங்க நிர்வாகிகள் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் மூலம் வழங்குவதற்கு உள்ளதாக தெரிவித்தனர்.  மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரிடம் கேட்ட பொழுதும் அமைச்சரின் தேதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

விளம்பரத்திற்காக பயனற்று கிடப்பில்
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 100 மூன்று சக்கர சைக்கிள்கள்,சக்கர நாற்காலிகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.  இப்படி பல மாவட்டங்களில் கடந்த ஆண்டே தரப்பட வேண்டிய வாகனங்கள், உபகரணங்கள் அமைச்சர்கள், ஆளும் கட்சியினரின் விளம்பர நோக்கங்களுக்காக பயனற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது. உடனடியாக அவைகளை பயனாளிகளுக்கு வழங்க முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென எமது சங்கம் கோருகிறது.

லஞ்ச அதிகாரியின் அராஜகம்
மூன்று சக்கர வாகனங்கள், உபகரணங்கள் பெறுவதற்கு மாற்றுத்திறனாளி அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவது தெரிகிறது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற 
மாற்றுத்திறனாளிக்கு 2018ல் ஸ்கூட்டி வழங்க மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மோகன் என்பவர் ரூ.5000/- லஞ்சம் கேட்டு, தர முடியாததால், ரமேஷின் மாற்றுத்திறனாளி அரசு அடையாள சான்றை 2 ஆண்டுகளாக பிணையாக வாங்கி 
வைத்துள்ளார்.  சமீபத்தில் கொரோனா நிவாரணம் வாங்கமுடியாததால்,  அவதிப்பட்ட அவர், எமது சங்க நிர்வாகிகள் தலையிட்ட பின்னரே கொடுத்துள்ளார்.  இப்படி லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சரை எமது சங்கம் கோருகிறது.இதனை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாநிலத்தலைவர் பா.ஜான்சிரானி,பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.