தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிப்ரவரி 14 புதனன்று தலைமை செயலகத்தில் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, கு.தியாகராஜன், மு.வெங்கடேசன், நேரு, தியோடர் ராபின்சன், இரா.தாஸ், பொன்னிவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.