சென்னை, பிப். 5- தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்க ளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தர விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த மாணவர்களுக் கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வு பணிகளை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.
மாநில அளவில் பணி யாற்றும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குமர குருபரன் உத்தரவு பிறப்பித் துள்ளார்.
சென்னைக்கு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஸ்ரீ வெங்கட ப்ரியா. ஈரோட்டுக்கு தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் மேலாண்மை இயக்கு நர் கெஜலட்சுமி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி செங்கல்பட்டுக் கும், பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி திருவள்ளூருக்கும், தொடக்க கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வேலூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பி னர் செயலாளர் உமா காஞ்சி புரத்திற்கும், தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் மதுரைக்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் குப்புசாமி சேலத் திற்கும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் உமா கோவைக்கும் என 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.