tamilnadu

img

சென்னை: மழை நீர் தேங்கியதால் பள்ளம் தெரியாமல் தவறி விழுந்த முதியவர் பலி

சென்னையில் மழை நீர் தேங்கியதால் பள்ளம் தெரியாமல் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே நரசிம்மன் என்ற முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் கழிவுநீர் தேங்கும் பாதாள சாக்கடை அருகே இருந்த பள்ளத்தில் மழை நீர் தண்ணீர் தேங்கி முற்றிலுமாக மறைந்திருந்தது. இதனால் பள்ளம் தெரியாமல் நரசிம்மன் அந்த பள்ளத்தில் தவறி விழுந்தார் இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன் நொளம்பூர் கால்வாயில் தவறி விழுந்து தாய் மகள் இருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;