ஆதீனத்தை மிரட்டிய பாஜக தலைவருக்கு ஜாமீன் இல்லை
சென்னை, ஏப்.10- தருமபுரம் ஆதீ னத்தை மிரட்டி ரூ. 40 கோடி பணம் கேட்ட விவகாரத் தில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அகோ ரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவை யில் இருப்பதாகவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் தற்போது வரை தலைமறைவாக இருப்பதாகவும், எனவே, அகோரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் தமிழக அரசு தெரி வித்தது. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பாஜக தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
விரலில் மை வைப்பது ‘நீட்’ எழுத தடையாகாது!
சென்னை, ஏப்.10- வாக்களித்த தற்கு அடையாள மாக விரலில் மை வைக்கப்பட்டிருந் தால், நீட் உள்ளிட்ட தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தக் கூடிய தேர்வுகளில் பங்கேற்க முடியாது என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித் துள்ளது.
அதுபோன்ற எந்த உத்தரவையும் தேசிய தேர்வு முகமை பிறப்பிக்க வில்லை என்றும், போலியான செய்தி களை நம்பாமல், ஜனநாயக கடமை யைக் ஆற்றுமாறும் தேசிய தேர்வு முகமை (NTA) அறிவுறுத்தியுள்ளது.
ஏப்.19 திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை!
சென்னை, ஏப்.10- மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பொது விடு முறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி விடு முறை வழங்காத தனியார் நிறுவனங்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழி யர்களுக்கும் ஏப்ரல் 19 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் தலைவர்களின் இன்றைய பிரச்சாரம்
சீத்தாராம் யெச்சூரி
பொதுச்செயலாளர்
மத்திய சென்னை
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
விழுப்புரம் (கண்டாச்சிபுரம்)
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
சேலம்
உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர்
கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை)
தர்மபுரி (அரூர்)
அ.சவுந்தரராசன்
மூத்த தலைவர்
ஆரணி (செய்யாறு)
ஏப்.15 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை, ஏப்.10- தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே, ஏப்ரல் 11 துவங்கி ஏப்ரல் 15 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல ஏப்ரல் 14 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.எம்.வீரப்பனுக்குஅரசு மரியாதை!
சென்னை, ஏப்.10- மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் (98) வயது மூப்பு காரணமாக செவ்வாயன்று காலமா னார். அவரது மறைவுக்கு தமிழக முதல் வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசி யல் அரசியல் தலைவர்களும், ரஜினி காந்த், கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்டப் பல திரைப்பிர பலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி னர். இந்நிலையில், புதனன்று மாலை இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக ஆர்.எம். வீரப்பனின் உட லுக்கு தமிழக அரசு சார்பில் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட் டது.