தி.மலையில் தொற்று 486
திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் 486ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று 107ஆக உயர்வு
புதுவையில் ஜிப்மர் மருத்துவர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் ஜூன் 8 திறப்பு
புதுச்சேரியில் மதவழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் திங்கட்கிழமை (ஜூன் 8) முதல் கட்டுபாடுகளுடன் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் 3 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் அசோக சக்கரவர்த்தி (58) என்பவரை கடத்திக் கொலைசெய்த வழக்கில் தேசூர் அடுத்த முளப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (38), தெள்ளாரை சேர்ந்த முருகன் (32), கவிஅரசன் (28) ஆகிய 3 பேரை தேவூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (42) அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்வருக்கு சொந்தமான இடத்தில் கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த உமராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.