tamilnadu

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி

சென்னை,அக்.24- நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள்  வியாழனன்று எண்ணப்பட்டன.   விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இத்தொகுதியில் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 766 வாக்கு களைப் பெற்று வெற்றி பெற்றார்.  திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயி ரத்து 842 வாக்குகளைப் பெற்றார்.   நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி  நாராயணன்  உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 66.35 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் அதிமுக வேட்பாளர் நாரா யணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், 61 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்றார்.